இலங்கை

அடிப்படை மருந்துகள் கூட இல்லாத நிலை: அதிகளவிலான மரணங்கள் சம்பவிக்கலாம்- வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

மூதூர் தள வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை-மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டொக்டர் இளங்கோவன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் கடமையில் இருப்பதாகவும் இதனால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்டுள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பத்து விசேட வைத்தியர்களும், 20 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கிண்ணியா, மூதூர்,கந்தளாய் போன்ற வைத்தியசாலைகளில் 15 விசேட வைத்திய நிபுணர்களும், 27 வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மூதூர் தள வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், மூதூர் வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள் நிகழ்கின்றது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவிலான பிறப்புகள் நிகழ்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம் போன்றவற்றிற்குரிய அடிப்படை மருந்துகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவிலான மரணங்கள் சம்பவிக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content