ஐரோப்பா

பாரிஸில் வீட்டின் மாடியில் இருந்து இளைஞனின் மோசமான செயல் – காயமின்றி தப்பிய மக்கள்

பாரிஸ் வீட்டின் மாடியில் இருந்து வீதியில் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 8 மணி அளவில் பொலிஸார் எச்சரிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.

பல்வேறு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக பலர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில் அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் MR73 ரக கைத்துப்பாக்கியும், Glock தானியங்கி பிஸ்டல் வகை துப்பாக்கியும் இருந்ததாகவும், அவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அதிஷ்ட்டவசமாக எவரும் காயமடையவில்லை. கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content