வட அமெரிக்கா

விரக்கிதியல் சொந்த பிள்ளைகளை கொன்ற கனடிய இளம் தாய்!

கனடாவில் தன் சொந்த பிள்ளைகளை கொன்றதாக இளம் தாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான கோஸ்டா கொலியாஸ் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நான்கு மற்றும் ஐந்து வயதான இரண்டு ஆண் குழந்தைகளை இந்தப் பெண் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைக்க தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இரண்டு பிள்ளைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.குறித்த சிறுவர்களின் தந்தை லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார்.

விரக்தி காரணமாக பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள இந்த பெண் முயற்சித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்