இலங்கை செய்தி

வடிகாலில் இருந்து  பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்லை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் இருந்து  பெண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் காலி நெலுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் சுமார் 06 வருடங்களுக்கு முன்னர் வர்த்தக வலயத்தில் பணிபுரிய வந்ததாகவும் அவர் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை