இந்தியா

இந்தியாவில் வங்கியில் பெற்ற கடனுக்காக மகனை விற்ற பெண்!

வங்கியில் பெற்ற ரூ.9,000 நகைக்கடனுக்காக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் மகனையே விற்றுள்ளார்.

அங்குள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள பச்சிரா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹரூன், ரெகானா தம்பதியர் வறுமையில் வாடுகின்றனர்.

இதையடுத்து, தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 கடன் பெற்றனர். எனினும் கடனுக்குரிய தவணைகளை உடனுக்குடன் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக தவணை நிலுவைத் தொகை சேர்ந்ததால் கடும் அழுத்தத்துக்கு ஆளானதாகச் சொல்கிறார் ரெகானா.

தனியார் நிறுவனத்தின் கடன் வசூலிக்கும் முகவர்கள் தொடர்புகொண்டு தங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டியதாகவும் பலவிதமாக துன்புறுத்தியதாகவும் ரெகானா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேறு வழி இல்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக குழந்தையை விற்கும்படி தனது சகோதரர் ஆலோசனை கூறியதாகவும் அதன் பேரில் குழந்தையை விற்றதாகவும் ரெகானா மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 41 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே