இந்தியா

சொகுசு ஹோட்டலில் 13 நாட்கள் தங்கி விட்டு வாடகை தராமல் தப்பியோட முயன்ற பெண்ணொருவர் கைது!

டெல்லியில் சொகுசு ஹோட்டலில் 13 நாள் தங்கிவிட்டு பணம் தராமல் தப்பி ஓட முயன்ற ஆந்திர பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி சாமுவேல் (37). இவர், டெல்லி விமான நிலையம் அருகே ஏரோசிட்டியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 15 நாட்களாக தங்கியிருந்துள்ளார். ஆனால், அதற்கான வாடகையை செலுத்தாததால், இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அப்போது, ஜான்சிராணி அவர்களைக் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

இருப்பினும், அவரை ஹோட்டல் ஊழியர்கள் மடக்கிப் பிடித்து, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தினர் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொலிஸார், ஜான்சிராணி மீது ஐபிசி பிரிவு 420 (மோசடி)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!