இந்தியாவில் வளர்ப்புப் பூனை கடித்து பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்புப் பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணின் வளர்ப்புப் பூனை அவரைக் கடித்துள்ளது. பூனை கடிக்குத் தேவையான தடுப்பூசிகளை அவர் எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் கிருமி பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 31 times, 1 visits today)