இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 03 மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 03  மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புலத்சிங்கள, மத்துகம, ஹொரண மற்றும் வல்லவிட்ட ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்பிட்டிய, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாத்தறை மாவடத்தின் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

NBRO இன் படி, இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் திடீரென தோன்றும் நீர் முளைகள், சுவர்கள் மற்றும் மண்ணில் விரிசல் ஏற்படுவதைக் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!