இலங்கை

வீதியை கடக்கமுயன்ற போது இளநீர் லொறி மோதியதில் இரண்டரை வயது குழந்தை பலி!

இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, ​இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை இகினியாகல நாமல் ஓயா ஏரியின் ஆரம்ப பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை இகினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் இளநீர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!