இலங்கை

சீதுவ பிரதேசத்தில் மரண வீட்டில் வர்த்தகர் ஒருவர் வெட்டிக் கொலை

சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (07) காலை கூரிய மன்னா கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் தொம்மகே எரோசன் ரஜீந்திர பெர்னாண்டோ என்ற 46 வயதான, வர்த்தகர் ஒருவரே உயிரிழந்தார்.

இவர் மீது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இரவு வேளைகளில் மரண வீடுகளில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 01.30 மணியளவில் சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றிற்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த இவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கூரிய மன்னா கத்திகளால் தாக்கியுள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நீர்கொழும்பு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!