இந்தியா

இந்தியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : 10 பேர் பலி!

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் உள்ள பேட்டரி சாஷ்மா அருகே கார்ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 1.15 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), மற்றும் சிவில் விரைவுப் பதிலளிப்புக் குழு (QRT) ரம்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த மழைக்கு மத்தியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே