இலங்கை

குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டப்படும்!

தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்க வேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், குருந்தூர் மலையில் குவிக்கப்பட்ட பொலிசார், சிறப்பு அதிரடிப்படையினருக்கு மத்தியில்  மத்தியில் பொங்கல் நிகழ்வு எல்லோரின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றுள்ளது.

பல்வேறு பட்ட தடைகள் இருந்தும் தடைகளை தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறையினுடைய நியாயமான கரிசனைகள் எண்ணத்தில் எடுக்கப்பட்டு நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த பொங்கலுக்காக எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு அடையாளமாக வாழ்ந்து வந்த குருந்தூர் மலையிலே அவர்களை இருப்பினை இல்லாமல் செய்து இதனை ஒரு பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ளார்.

எந்த வித அனுமதியும் இன்றி தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான ஆதரவுடனும் அரச ஆதரவுடனும் கட்டப்பட்டுள்ளது.

தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது. அந்த இடத்தில் விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல. இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கு ஒரு சட்டமாக ஆக்கிரமிப்பாளர்களின் நிலையினை இந்த இடத்தில் பார்கின்றோம்.

இது தமிழர்களின் இருப்பினையும் எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியுள்ளது. ஆனாலும், நாங்கள் ஒற்றுமையாக அனைத்து தமிழர்களும் இணைந்து வந்து எம்பெருமான் சிவனுக்குரிய அரோகரா என்ற நாமத்துடன் பொங்கல் நிகழ்வினை முன்னெடுத்தோம்.

இந்த பொங்கல் நிகழ்வு தொடர்ந்து மாதம் மாதம் நடைபெறும் அதேவேளை மக்களின் இருப்பினையும் அடையாளங்களை பேணும் வகையிலும் எங்கள் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இந்த இடத்தில் பாரம்பரியமான வரலாற்று புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் எல்லோரும் இணைந்து முன்னெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!