இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர்… கொலை செய்து எரித்த 3 சிறுவர்கள் கைது!

பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை வெட்டிக்கொலை செய்து எரித்த மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு டெல்லி பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் உடல் நேற்று கிடந்தது. பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர், ஆசாத் அகமது(25) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 16 வயது சிறுவனைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்ட சிறுவனை, ஆசாத் அகமது பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் சிறுவன் கூறினார். இதையடுத்து அவரை கொலை செய்ய மூன்று சிறுவர்களும் முடிவு செய்தனர்.

இதன்படி ஆள் அரவமற்ற இடத்திற்கு ஆசாத்தை வரவழைத்து 16 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதன் பின் அவரது உடலை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அவரது இரண்டு நண்பர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் 17 வயதாகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content