இலங்கை செய்தி

மாவனல்லை நகரில் திடீரென குழப்பமிட்ட யானை

மாவனல்லை நகரில் இடம்பெற்ற வெசாக் ஊர்வலத்தின் இறுதியில் யானையொன்று குழப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த  ஒருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் உள்ள யானை வகையை சேர்ந்த ராஜா என்ற யானையே இவ்வாறு குழம்பியுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஊர்வலத்தின் முடிவில் இன்று இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

பீதியுடன் மாவனல்லை நகருக்கு வந்த யானை தற்போது சந்தைப் பகுதியில் விசேட பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 29 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content