ஆசியா

சீனாவில் ஷாங்காய் நகரில் கத்திக்குத்து தாக்குதல்; மூவர் மரணம், 15 பேர் காயம்

சீனாவின் ஷாங்காய் நகரில் செப்டம்பர் 30ஆம் திகதியன்று பேராங்காடி ஒன்றில் நபர் ஒருவர் அங்கிருந்த பலரைக் கத்தியால் தாக்கினார்.இதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிங்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள பல பகுதிகளில் இதுபோன்ற பல தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஷாங்காய் பேரங்காடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.மற்ற 15 பேரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்திய 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி தொடர்பான பிரச்சினை காரணமாக கோபமடைந்த அந்த நபர் இத்தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!