இலங்கை செய்தி

ஹஜ்ஜில் கலந்துகொண்ட இலங்கை யாத்திரிகர் ஒருவர் உயிரிழப்பு

ஹஜ்ஜில் கலந்துகொண்ட இலங்கை யாத்திரிகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மக்காவைச் சூழவுள்ள பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அவருக்கு சுகவீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக மக்காவில் 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!