இலங்கை செய்தி

மோசமான வானிலை – ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு பணத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக இன்று (02) காலை வரை ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

மொத்தம் 17 வீடுகள் இழப்புகளும், 3304 பகுதி வீடுகளும், 54 வணிக இட இழப்புகளும், 2611 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அந்த மையம் கூறுகிறது.

அதிகளவான அனர்த்தங்கள் தென் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

1,982 குடும்பங்களைச் சேர்ந்த 6,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,005 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், பலத்த காற்று, மண்சரிவு, மரம் மற்றும் மண் சரிவு, கடும் மழை போன்றவற்றினால் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content