வட அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு – இருவர் பலி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொலராடோ பல்கலைக்கழக அமைப்பை உருவாக்கும் நான்கு வளாகங்களில் இதுவும் ஒன்றாகும் . இந்த பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நேற்று காலை 6 மணியளவில் திடீர் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என தெரியவில்லை.மேலும் 2 மரணங்களும் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்