இலங்கை

யாழிலிருந்து – மட்டக்களப்பு நோக்கி பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து -மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று (13) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மட்டக்களப்பு – பாரதி லேன் பகுதியில் வசித்து வரும் யோகநாதன் அசோக்குமார் (40வயது) மற்றும் சுப்ரமணியம் சிவசுப்ரமணியம் (44வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

காயமடைந்த இருவரையும் மொரவெவ பொலிஸார் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களின் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!