ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகர் வீதியில் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இளம் பெண் ஒருவர்வீதி ஒன்றில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வழக்கு தொடுத்ததை அடுத்து, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள rue Louis-Blanc வீதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து தனது நண்பருடன் வெளியேறிய குறித்த பெண், சில நிமிடங்களில் அவரை பிரிந்து அவரது வீடு நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தார்.

பின்னர் rue Alexandre-Parodi மற்றும் Faubourg-Saint-Martin வீதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து குறித்த பெண் ஒரு மர்ம நபரால் வழிமறிக்கப்பட்டார்.

பின்னர் அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தொடர்ச்சியாக கூச்சல் எழுப்பியதை தொடர்ந்து, குறித்த நபர் அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அதையடுத்து சில நிமிடங்களில் இரவு நேர கண்கணிப்பில் ஈடுபடும் பொலிஸார் அவரை மீட்டனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!