இலங்கை

இலங்கையில் காதலியை பார்க்க சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் காதலியை பார்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை தல்தென 7 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஆற்றில் காணப்பட்ட நிலையில் இளைஞனின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று மாலை மஹியங்கனையை சேர்ந்த 27 வயதான எம்.எம்.பிரபாத் சஞ்ஜீவ என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன், அவரது காதலி வசித்து வருவதாக கூறப்படும் தல்தென 7 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் தினம் இரவு சென்று தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதை அறிந்துக்கொண்ட வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு கீழே உள்ள ஆற்றில் சுமார் 300 மீட்டார் தூரத்தில் கிடந்த நிலையில் அவரது சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளுக்கு பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் பதுளை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!