பிரான்ஸ் தலைநகரில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கணவனின் மோசமான செயல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெண் ஒருவர் தனது கணவரால் காத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பல வெட்டுக்காயங்களுக்கு உள்ளான அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
காலை 8 மணி அளவில் Gare de l’Est நிலையத்துக்கு அருகே உள்ள பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த 51 வயதுடைய ஒருவர், தமது மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக தெரிவித்தார்.
அதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.
கணவன் மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தின் முடிவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதெவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)





