இலங்கை

விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலை -திரியாய் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (28) ,மாலை இடம் பெற்றுள்ளது.

கஷ்ட நிலைமை காரணமாக விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற போது விழுந்து கிடந்த மரத்துக்கு கீழால் உறங்கிக் கொண்டிருந்த கரடி பாய்ந்து தாக்கியதால் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கும்புறுபிட்டி- நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான என். செல்வராசா (41 வயது) எனவும் தெரிய வருகின்றது.

குறித்த பிரதேசத்தில் கரடிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், தேன் எடுக்கும் காலத்தில் கரடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

படுகாயம் அடைந்து குறித்த நபர் சுய நினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குக்குட்பட்ட சோபிதகம பகுதியைச் சேர்ந்த பீ.சமன்த (51வயது) என்பவர் சைக்கிளில் இருந்து விழுந்து மயக்கமுற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content