ஆசியா

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்.. ஒரு பகுதி குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பரபரப்பு!

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதி குடியிருப்பில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் பயந்து ஒடினர்.

சீனாவும் பிரான்ஸும் இணைந்து லாங் மார்ச் 2-சி என்ற ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. சில நிமிடங்களில் ராக்கெட்டின் ஒரு பகுதி குடியிருப்பில் விழுந்ததுடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் பயந்து ஓடினர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக சீன விண்வெளித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா - விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதி குடியிருப்பில் விழுந்த காட்சி

விண்மீன்கள் வெடிப்புகளை கண்காணிக்கும் சக்திவாய்ந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானியல் ஆராய்ச்சியில் இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றும் எனவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!