செய்தி

வைத்தியசாலையில் திடீரென நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

வைத்தியசாலைகளில் ஏற்பட்ட 06 மரணங்களில் ஐந்து மரணங்கள் போதைப்பொருள் ஒவ்வாமையினால் ஏற்பட்டவை என அண்மையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குறித்த குழுவானது ஆய்வின் அறிக்கைகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பித்திருந்தது.

தற்போது அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன.  எவ்வாறாயினும், மருத்துவ மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அறிக்கையின்படி,  உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமைகளை நிர்வகிப்பதற்கான சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அது தொடர்பான பொறிமுறையை தயாரித்தல், உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் பதிவாகும் சந்தர்ப்பங்களில் முறையான மருத்துவ தணிக்கை நடத்துதல், போதைப்பொருள் பதிவின் போது சீரற்ற பரிசோதனைகள் மூலம் நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரத்தை பேணுதல் போன்ற விடயங்களை குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி