இலங்கை செய்தி

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை காட்டுப்பூனை

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு உரிய அனுமதியின்றி ஆப்பிரிக்க காட்டுப் பூனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

SITES (S.I.T.E.S.) மாநாட்டின் மூலம் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த காட்டுப் பூனை, இலங்கையின் “சிறுத்தை” போன்ற விலங்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காட்டுப் பூனைகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கண்டியில் வசிக்கும் ஒருவரே இந்த ஆப்பிரிக்க காட்டுப் பூனையை இந்த நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை சுங்கத்தின் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு மற்றும் வனவிலங்கு திணைக்களம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

(Visited 3 times, 1 visits today)
See also  IMF அதிகாரிகள் இலங்கையின் புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பு!
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content