இந்தியா செய்தி

குஜராத்தில் பாகிஸ்தானிற்காக உளவு பார்த்த நபர் ஒருவர் கைது

குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட பிரவின் மிஸ்ரா, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆர் அன்ட் டி நிறுவனங்கள் பற்றிய மிக ரகசிய தகவல்களை சேகரித்ததாக குஜராத் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தெரிவித்துள்ளது.

உதம்பூர் ராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சிஐடி விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

பரூச் மாவட்டத்தில் உள்ள அங்க்லேஷ்வரில் வசிக்கும் மற்றும் பீகாரில் உள்ள முசாபர்பூரைச் சேர்ந்த மிஸ்ரா, பாகிஸ்தான் உளவுத்துறை இயக்குனருடன் வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் ஆடியோ மூலம் “நாட்டிற்கு எதிராக கடுமையான பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கிரிமினல் சதித்திட்டத்தை செயல்படுத்த” தொடர்பு கொண்டதாக சிஐடி தெரிவித்துள்ளது.

இந்திய வாட்ஸ்அப் எண்ணையும், ‘சோனல் கர்க்’ என்ற போலி பேஸ்புக் ஐடியையும் பயன்படுத்திய மிஸ்ரா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content