ஐரோப்பா

பிரான்ஸில் தோல்வியை தழுவிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!

பிரான்ஸின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sébastien Lecornu) மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது.

பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்த, நாடாளுமன்றத்தில் உள்ள 577 எம்.பி.க்களில் 289 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.  ஆனால் 271 வாக்குகள் கிடைக்கப்பெற்று தீர்மானம் தோல்வியை தழுவியது.

இதேவேளை மரைன் லு பென்னின் ( Marine Le Pen) தேசிய பேரணியால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானம் நிலுவையில் உள்ளது.

பிரான்ஸில் பிரதமருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்!

பிரான்ஸின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sébastien Lecornu) இன்று இரண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகளை எதிர்கொள்கிறார்.

தீவிர வலதுசாரி  தேசிய பேரணி கட்சி மற்றும் தீவிர இடதுசாரி கட்சியான லா பிரான்ஸ் இன்சூமைஸாலும் ( La France Insoumise) ஆகிய கட்சிகள் இவ்விரு தீர்மானங்களையும் கொண்டுவந்துள்ளன.

வரவு செலவு திட்டம், ஓய்வூதிய சீர்த்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட சில விடயங்கள் பிரான்ஸின் அரசியல் பரப்பில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் பதவியேற்றதை அடுத்து புதிய பிரெஞ்சு அமைச்சரவையை நியமித்துள்ள லெகோர்னு

 

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்