இலங்கை

இலங்கையில் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

இலங்கையில் டிஜிட்டல் மின்சாரக் கட்டண பட்டியலை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தெஹிவளை – ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் களனி ஆகிய பகுதிகளில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் மாதாந்த மின் கட்டணத்தின் சுருக்கம் வாடிக்கையாளரின் கையடைக்க தொலைபேசிக்கு அனுப்பப்படவுள்ளதுடன், மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்படவுள்ளது.

முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், இலங்கை முழுவதும் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!