ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு முதல் புறப்படும் போது வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் தங்கள் கடவுசீட்டுகளை காண்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, பயணிகளின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் செல்லும் விமானத்தின் தகவல்களை கொண்டு தனித்துவம் வாய்ந்த i டோக்கன் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Bag-drop, இமிக்ரேஷன் மற்றும் போர்டிங் போன்ற பல தானியங்கி சோதனைச் சாவடிகளில் பயணிகளின் அடையாளம் மற்றும் விமான விவரங்களைச் சரிபார்க்க அது பயன்படும்.

அதாவது, விமான நிலையத்தில் பயணி ஒருவரின் புறப்பாடு அனுமதி என்பது மனித ஈடுபாடு இல்லாமலும், தானியங்கி முறையிலும் இருக்கும்.

இந்த குடிநுழைவு சட்ட திருத்த மசோதா 2ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசபின் தியோ அதனை அறிமுகம் செய்தார்.

அதே போல, சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் பயணிகளைப் பற்றிய தகவல்களைப் பெறவும், அதனை மதிப்பீடு செய்யவும் ICA அதிகாரிகளுக்கு இந்த மசோதா கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content