பிரித்தானியாவில் தபால் வாக்களிப்பில் எழுந்துள்ள புதிய சிக்கல்!

பிரித்தானியாவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், சிலருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் அவசரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
கன்சர்வேடிவ் மந்திரி மரியா கால்ஃபீல்ட், மக்கள் இன்னும் தபால் வாக்குகளைப் பெறாத “பல” தொகுதிகள் குறித்து தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான தபால் வாக்குகள் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே 90 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வாக்குச் சீட்டுகள் வராதது குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 27 times, 1 visits today)