இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விளையாட்டு! கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பெருமிதம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான், கொழும்பில் சிலோன் கார்ன்ஹோல் கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததன் மூலம் புதிய விளையாட்டு ஒன்றை இன்று நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.
“கார்ன்ஹோல் எந்த வயதினரும் ரசிக்கக்கூடிய ஒரு விளையாட்டு. இது அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது மற்றும் மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டாகும், ”என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விளையாட்டின் மூலம் இலங்கை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும் என டில்ஷான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆண்டு உலக கார்ன்ஹோல் சாம்பியன்ஷிப் நடைபெறும், மேலும் இந்த நிகழ்விற்கு இலங்கை அணியை களமிறக்குவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)