ஐரோப்பிய நாடொன்றில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டம்

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அரசு அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை பொலிஸார் பெட்ரோல் குண்டுகளை வீசி கலைத்தனர்.
பிரதமர் எடி ரமாவின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறி, அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
மேலும் ஊழல் புகாரில், முன்னாள் பிரதமரும், எதிர்கட்சி தலைவருமான சலி பெரீஷா வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 23 times, 1 visits today)