இலங்கை

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் பாரிய மாற்றம்!

இலங்கையில் மரக்கறிகளின் விலை 05 நாட்களில் 40% குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்ய மறுத்து மாற்று வழிகளில் ஈடுபடுவதனால் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாவாக உயர்ந்திருந்த ஒரு கிலோ கேரட்டின் சில்லறை விலை இன்று 900 ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், முட்டைகோஸ், வெண்டைக்காய், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் கடந்த சில தினங்களை விட குறைந்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!