ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிர புற்றுநோயால் மூக்கை இழந்த நபர் : அறுவைசிகிச்சையில் ஏற்பட்ட மாற்றம்!

பிரித்தானியாவில் புற்றுநோயால் மூக்கை இழந்த ஒரு நபர் அசாதாரண அறுவை சிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளார்.

74 வயதான பீட்டர் டிக்சன், 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தனது மூக்கின் ஓரத்தில் ஒரு பரு இருப்பதை முதலில் கவனித்தார், ஆனால் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.

சில மாதங்கள் கடந்தும், ‘செதில் சொறி’ இருந்த பிறகு அவர் வைத்தியரை அணுக முடிவு செய்துள்ளார். இதன்போது அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரது மூக்கைப் பரிசோதித்து, மறுபுறத்தில் இரண்டாவது நோயுற்ற இடத்தைக் கண்டறிந்தனர்.

புற்றுநோய் செல்களை அகற்ற, அறுவைசிகிச்சை நிபுணர்கள் தோலின் இரண்டு பெரிய பகுதிகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஆடன்புரூக்ஸ் மருத்துவமனையில் செப்டம்பர் 2023 இல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி நெற்றியில் இருந்து ஒரு தோலை எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தமையால் வைத்தியர்கள் யானையின் தும்பிக்கை என்று அழைத்தார்கள்.

அதிர்ஷ்ட வசமாக அவருடைய அனைத்து புற்றுநோய் செல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content