செய்தி

ஹெரோயின் விற்பனை செய்து வந்த ஒருவர் கைது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க காவற்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி எனக் கூறிக்கொண்டு கட்டுநாயக்க பிரதேசத்தில் சுற்றித் திரிந்து ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக கொண்டு வந்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு நீண்டகாலமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

மேலும் அவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி