இலங்கை

வட்டவளையில் 30 அடி குன்றில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளான லொறி!

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்ய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வட்டவளை பகுதியில் உள்ள குன்றின் மீது விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று (07) காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது லொறியில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், லொறியின் உதவியாளர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content