ஐரோப்பா

லண்டனில் வீடற்ற நபர் ஒருவருக்கு நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவு!

லண்டனின் பரபரப்பான நிலத்தடி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளிய வீடற்ற நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.ஸ

24 வயதான குர்திஷ் குடியேறிய ப்ருவா ஷோர்ஷ், பிப்ரவரி 3 ஆம் திகதி மத்திய லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் அண்டர்கிரவுண்ட் நிலையத்தில் அந்நியரான Tadeusz Potoczek (61) என்பவரை தள்ளினார்.

வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த தபால்காரரான திரு போடோக்செக், இதில் பாதிக்கப்பட்டவராவார்.  அவரை மற்றொரு பயணி பிளாட்பாரத்திற்கு திரும்ப உதவி செய்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நடுவர் மன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 32 நிமிட விவாதத்திற்குப் பிறகு ஷோர்ஷ் குற்றவாளி என நடுவர் மன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!