ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து :  தந்தை மகள் பலி!

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தந்தையும் அவரது ஒன்பது வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.19 மணிக்கு ஹெக்மண்ட்வைக்கில்  ரஸ்ஸல் குளோஸில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இரண்டு சிறுமிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மற்றுமொரு நபர் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 11 வயது சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையும் இருப்பதாக போலீசார் நம்பவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!