ஆசியா

பாலியில் உள்ள கோயிலில் திடீரென ஆடையைக் கழட்டி நடனம் ஆடிய ஜேர்மன் பெண் திகைத்து நின்ற மக்கள்!

இந்தோனேசியாவின் பாலியில் உள்ள  கோவில் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நிர்வாணமாக நடனமாடிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் ஜேர்மனை சேர்ந்த துஷின்ஸ்கி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 28 வயதான துஷின்ஸ்கி என்ற பெண் ஆலயத்தின் பாதுகாவலர்களை புறம் தள்ளியதாக கூறப்படுகிறது.

பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நடனமாடியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து துஷின்ஸ்கியை கைது செய்த பொலிஸார் உடல் மற்றும் உளவியல் மதீப்பீடுகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முன்பாக அவரை விசாரணை செய்துள்ளனர்.

அத்துடன் அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

நாட்டின் பொது அநாகரீகச் சட்டங்களை மீறியமைக்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content