இலங்கை

முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் இலங்கை!

இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர்.

இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில், தேசிய டிஜிட்டல் பொருளாதார முடுக்கம் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர், சர்வதேச நாணய நிதியம் உட்பட பல உலகளாவிய நிறுவனங்கள், மனித தலையீடுகள் மற்றும் ஊழலைக் குறைப்பதற்காக வரிக் கோரிக்கைகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன.

இருப்பினும், பல அரசு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலில் மெத்தனமாக இருப்பதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content