இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது

சுமார் 26 மில்லியன் பெறுமதியான கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 57 மாத்திரைகளுடன் மடகாஸ்கர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண், எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவின் மும்பை ஊடாக  நாட்டிற்குள் வந்துள்ளார்.

அந்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை அகற்றுவதற்காக நீர்கொழும்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைத்திருந்த 57 போதை மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் எடை சுமார் 620 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலில் மோலும் போதை மாத்திரைகள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகத்திற்குரிய பெண்ணும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!