இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டு பெண்ணொருவர் பாராட்டு!

கிரிகோரியன் மரின் என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தனது தொலைந்து போன பயணப்பொதிகள் விரைவாக மீட்கப்பட்டதை அடுத்து இலங்கை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஒக்டோபர் 20, 2024 அன்று மரின் கட்டுநாயக்க வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லை. காவல்துறை பரிசோதகர் வசந்த குமாரவிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, பாதுகாப்புக் காட்சிகளை சோதனை செய்த போது, பையை எடுத்துச் சென்ற பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதுடன், நீர்கொழும்பு நீதிமன்றம் அவருக்கு ரூ. 600,000 நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டது.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் விரைவான நடவடிக்கைக்கு காணொளி செய்தி ஊடாக இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன் மரின் நன்றி தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!