திருகோணமலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தையும் மகளும்

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் தபால் ரயிலில் பாய்ந்து தந்தையும் மகளும் த விபரீத முடிவை எடுத்துள்ளத கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும் மகளும் ரயிலில் குதித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
கந்தளாய்-பராக்கிர மாவத்தையில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் 38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயியில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)