இலங்கை செய்தி

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல பாதள உலகக் குழு தலைவர்

டுபாய்யில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரமேஷ் மிஹிரங்க என அழைக்கப்படும் மன்னா ரமேஷ் இன்று காலை  இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள குழுவினால் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் டுபாய் மாநிலத்தில் சிவப்பு பிடியாணை உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்னா ரமேஷை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் செயற்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மன்னா ரமேஷ், அவிசாவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வர்த்தகர்களை மிரட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!