ஐரோப்பா

விபரீத முடிவை எடுத்த பிரபல வைத்தியர் … காரணமாயமைந்த ஆன்டிபயாடிக் சிகிச்சை

இதயவியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

உலகில் முதன்முதலாக பெனிசிலின் என்னும் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது.காலப்போக்கில் புதிது புதிதாக பல ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆன்டிபயாடிக்குகளைப் பொருத்தவரை, அவை உடலுக்குள் சென்று, உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை, குறிப்பாக பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அப்படி அவை நோய்க்கிருமிகளைக் கொல்லும் அதே நேரத்தில், அவற்றை உட்கொள்ளும் நபரின் உடலுக்கும் சில பக்க விளைவுகள் ஏற்படுத்துகின்றன.வெவ்வேறு ஆன்டிபயாடிக்குகள், தலைவலி முதல் சிறுநீரக பாதிப்பு வரையில், வெவ்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.சில குறிப்பிட்ட மருந்துகள், அபூர்வமாக தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும். பிரித்தானியாவில் ஒரே ஆண்டில் முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட 10 பேர் தற்கொலை செய்துகொண்டதைக் குறித்த செய்தி நினைவிருக்கலாம்.

தற்போது, புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கு, அவர் எடுத்துக்கொண்ட ஆன்டிபயாடிக் மருந்தின் பக்க விளைவு காரணம் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.பிரித்தானியாவின் West Yorkshireஇலுள்ள பிரபல மருத்துவமனையில் இதயவியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் Dr Robert Stevenson.

Appropriate Use of Antibiotics

புரோஸ்ட்ரேட் சோதனைக்காக தயாராவதற்காக அவருக்கு சிப்ரோப்ளாக்சசின் என்னும் ஆன்டிபயாடிக் கொடுக்கப்பட்டது. ஆன்டிபயாடிக் சிகிச்சை துவங்கி ஒரு வாரத்துக்குப் பின் ஒரு நாள் வாக்கிங் சென்ற அவர் காணாமல் போனார். பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் அவரை ஓரிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்தார்கள்.

நீதிமன்ற அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர் எடுத்துக்கொண்ட ஆன்டிபயாடிக் சிகிச்சையின் பக்க விளைவுகள் அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், Dr Robertக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைத்த மருத்துவருக்கே இப்படி ஒரு அபூர்வ பக்க விளைவு அந்த மாத்திரைக்கு இருப்பது தெரியவில்லை.

இன்னொரு விடயம், பல மருத்துவர்களுக்கு இந்த விடயம் தெரியாதாம். ஆக, உலகில் ஏராளமானோர் இந்த ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ளும் நிலையில், அதற்கு இப்படி ஒரு பயங்கர பக்க விளைவு இருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content