இலங்கை

இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் தமிழகத்தைச் சேர்ந்த ட்ரோன் நிறுவனம்!

Drone Startup Garuda Aerospace இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இது 50 நாடுகளில் நிறுவனத்தின் பிரசன்னத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட குளோபல் கருடா முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அக்னிஷ்வர் ஜெயப்பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ட்ரோன் கொள்கைகள் இன்னும் வளர்ச்சியடைந்து வருவதாலும், சுற்றுலா துறை வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களாலும் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளதாக சென்னையை சேர்ந்த அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் பாரம்பரியமாக ஒரு துல்லியமான விவசாய ட்ரோன் நிறுவனம். இந்த ஆண்டு, வருவாய் ரூ. 100 கோடியைத் தொட்டதைக் கண்டோம், குறிப்பாக எங்கள் துல்லியமான விவசாய ட்ரோன்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக கவனம் வருவதைக் கண்டோம். எனவே இது சரியான நேரம் என்று நாங்கள் உணர்ந்தோம் என நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

ங்கை இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால், அதன் வளரும் ட்ரோன் ஒழுங்குமுறை மற்றும் சிறிய சந்தை மற்ற பிராந்தியங்களுக்குச் செல்வதற்கு முன் எங்களுக்கு சரியான ஏவுதளமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!