இலங்கையில் லொத்தர் சீட்டு விலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
இலங்கையில் லொத்தர் சீட்டின் விலையை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியன இதனை தீர்மானித்துள்ளன.
அதனடிப்படையில், லொத்தர் சீட்டொன்றின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தினூடாக பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த மாரம்பகே தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)





