இலங்கை செய்தி

பியுமி ஹன்சமாலியை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது

பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மொடல் அழகி பியுமி ஹன்சமாலியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

பியுமி ஹன்ஸ்மாலியை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று (15) பரிசீலிக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

எனினும், பியுமி ஹன்சமாலி மீதான விசாரணை தடையின்றி தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணைகள் முடியும் வரை மனுதாரரை கைது செய்ய மாட்டோம் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, மனுவை மேலும் பரிசீலனைக்கு அழைக்கும் திகதி செப்டம்பர் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!