இந்தியா செய்தி

இந்தியாவில் ஒரு மாநிலத்தை ஒரு கொடிய வைரஸ் உலுக்கி வருகிறது

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்ட மற்றொரு சிறு குழந்தை உட்பட பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 700க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

கேரள மாநிலத்தில் உள்ள பல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன, பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவுவது இது 04 வது முறையாகும். 2018 ஆம் ஆண்டில், கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் உயிரிழந்தனர்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி